கொரோனாவில் இருந்து மீண்ட கருண் நாயர்.!

கொரோனாவில் இருந்து மீண்ட கருண் நாயர்

இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான கருண் நாயர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதும் கருண் நாயர் 14 நாட்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளார்.

மேலும் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பரிசோதனை செய்தார் பரிசோதனை யில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானதும், மேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற கருண் நாயர் அடுத்ததாக 3 பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் மேலும் இதற்கு பிறகு அவரால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது .

மேலும் இந்த நிலையில் கருண் நாயர் கடந்த 2018 மற்றும் 2019 ஐபிஎல் போட்டிகளில் 14 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் மேலும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பவர்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப் படும் 2 வது நபராக கருண் நாயர் உள்ளார். மேலும் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஃபீல்டிங் பயிற்சியாளர் திஷாந்திற்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.