ஜோதிமணி பற்றி கரு.நாகராஜன் சர்ச்சை கருத்து.! வலுக்கும் கண்டனம்.!

விவாத நிகழ்ச்சியில் ஜோதிமணியைத் தரக்குறையாகப் பேசி   கரு.நாகராஜன் எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சரிசெய்ய ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றும்போது அறிவித்தார். அதனைத் தொடர்ந்து  சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின் கீழ் 5 கட்டங்களாக   பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்தத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன. சமீபத்தில், ராகுல் காந்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் வாகன ஏற்பாடு செய்து கொடுத்து, அவர்களுடன் அமர்ந்து பேசினார். இது குறித்து நிர்மலா சீதாராமன்  “ஏன் அமர்ந்து பேசிக் கொண்டு. அவர்களுடைய பொருட்களை எடுத்து நடந்து செல்லலாமே” என கூறினார். இந்தப் பேச்சுக்கு  கடும்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இன்னல்கள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது.  இந்த விவாத நிகழ்ச்சியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, காங்கிரஸ் சார்பில் எம்பி ஜோதிமணி பாஜக சார்பில் கரு.நாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது கரு.நாகராஜன் , எம்.பி. ஜோதிமணியை தரக்குறைவாக விமர்சித்தார். இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, விவாதத்திலிருந்து எம்.பி. ஜோதிமணி வெளியேறினார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, கரு.நாகராஜனுக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. ஜோதிமணிக்கு ஆதரவாகப் பலரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும், பெண்களையும் தரம் பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியைச் சேர்ந்த கரு.நாகராஜன். என  ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின், எம்.பி சு.வெங்கடேசன் , எம்.பி திருமாவளவன்  ஆகியோர் எம்.பி ஜோதிமணிக்கு ஆதரவாகப்  கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Dinasuvadu desk