பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் முகலாயர்கள் – மோடியை கிண்டலடித்த கார்த்தி சிதம்பரம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் முகலாயர்கள் என்று கூறி பிரதமர் மோடியை கிண்டலடித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்தல் பேட்டை உயர்த்தி காண்பிப்பார்கள். அதுபோன்று பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்ததால், பிரதமர் மோடியும், நிர்மலா சீதாராமனும் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சரும் பேட்டை உயர்த்தி காண்பிக்க வேண்டியது தான் என்று விமர்சித்துள்ளார்.

இதனுடைய பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் மத்திய அரசு தான். பணமதிப்பு நீக்கம், குழப்பமான ஜிஎஸ்டி மற்றும் ஊரடங்கால் பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது என கூறியுள்ளார். இதனால் இவர்களுக்கு வருவாய் வரவேண்டும் என்பதற்காக பல வரிகளை போட்டுள்ளார்கள். வாரிசுமையை அதிகரித்து கொண்டே சென்றதால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை வெளிநாட்டு சந்தையில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதைவிட குறைவாகத்தான் உள்ளது. நாங்கள் இருக்கும்போது 100 டாலர் விற்றது. தற்போது 60 டாலருக்குத்தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், அவர்களின் வாரி சுமையால் பெட்ரோல் விலை ரூ.100 ஆக வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியை விட்டு செல்லும்போது, ரூ.70 ஆக இருந்தது என தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்துக்கு, இந்திய கூட்டமைப்புக்கு விரோதமானது தான் இந்த செஸ் வரி. பெட்ரோல் உயர்வுக்கு காரணம் காங்கிரஸ் தான் என்று மோடி கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் முகலாயர்களாக இருப்பார்கள் என நினைக்கிறன் என பிரதமர் மோடியை கிண்டலடித்து பதில் தெரிவித்துள்ளார்.

பிரதமராக 7 ஆண்டுகள் ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கும் பிரதமர் மோடி, கடந்த காங்கிரஸ் ஆட்சியால் தான் பெட்ரோல் விலை உயர்கிறது என்று கூறுவதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். வரி கூட்டிக்கொண்டு போவதால் விலை ஏறுகிறது. அதை குறைக்க வேண்டியது தானே என்றும் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் கூட இங்க பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

பிரியங்கா காந்தி பிரதமராவதற்கு முகராசி உள்ளது.. காங். வளாகத்தில் மன்சூர் அலிகான் பேட்டி.!

Mansoor Ali Khan : பிரதமராக வருவதற்கு முகராசி பிரியங்கா காந்திக்கு உள்ளது என மன்சூர் அலிகான் பேட்டியளித்தார். நடிகரும், அரசியல் பிரமுகருமான மன்சூர் அலிகான் இன்று…

32 mins ago

சுரக்காய் வடை செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சுரைக்காய் வடை - சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம். சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே …

44 mins ago

புது பிரச்சனையில் சிக்கிய தமன்னா…சம்மன் அனுப்பிய சைபர் கிரைம்.!

Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங்…

53 mins ago

தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்.? தேர்தல் ஆணையம் கூறுவதென்ன.?

Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…

1 hour ago

பிரதமர் மோடி, ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…

2 hours ago

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஆளில்லா விமானம் நொறுங்கி விபத்து.!

Air Force Plane Crash:  ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…

2 hours ago