வெளுத்து வாங்கும் கனமழை.. 3 பேர் பலி… 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…

கர்நாடகாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 4 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகா மாநிலத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, உள்ளது சில மாவட்டங்களில் பள்ளிகள் , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்நாடகாவில் உள்ள தட்சிண கன்னடாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒருவர் பலத்த காயம் அடைந்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது.

மேலும் அம்மாநில வானிலை ஆய்வு மையம் பல்வேறு பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக  உடுப்பி, குடகு, உத்தர கன்னடம் மற்றும் ஹாசன் ஆகிய இடங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ( வியாழக்கிழமை ) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்களுக்கு கடற்கரைக்கு செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment