#BigBreaking:கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா..!

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தற்போது  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகா முதல்வராக உள்ள 78 வயதான எடியூரப்பாவுக்கு பாஜகவில் கடும் எதிர்ப்பு உள்ளது.காரணம்,அவர் தனது மகன் விஜயேந்திராவுவை அடுத்த அரசியல் வாரிசாக,துணை முதல்வர் பதவிக்கு கொண்டு வர முயல்வதாகவும்,கட்சி நிர்வாகிகளை சரிவர கவனித்துக் கொள்வதில்லை எனவும்,மேலும் முக்கியமான ஆலோசனைகளில் கட்சி நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

எதிர்ப்பு:

மேலும்,கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்.எல்.ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும்,பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சித்தனர்.மேலும்,எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர்.ஏனெனில்,கட்சி விதிகளின்படி,75 வயது ஆனவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக,எடியூரப்பாவை மாற்றுவது என பாஜக மேலிடம் தீர்மானித்ததாக தகவல் வெளியானது.

பிரதமரை சந்திப்பு:

அதற்கேற்ப,கடந்த வாரம்,கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களை நேரில் சந்தித்தார்.இதனால்,அவர் பதவி விலகுவது உறுதியானது.

இதனால்,அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் இறங்கினர்.அவர்களை எடியூரப்பா சமாதானம் செய்தார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”பாஜகவின் உண்மையாக தொண்டனாக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன். இதனால் கட்சி தொண்டர்கள் யாரும் மரியாதைக் குறைவான போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்”, என்று தெரிவித்தார்.

அடுத்த முதல்வர் யார்?:

இதனிடையே,முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த முதல்வர் யார் என்கிற விவாதத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பசவராஜ் பொம்மை, சி.டி.ரவி உள்ளிட்ட பலரது பெயர்களும் அடிபட்டன.

ராஜினமா:

இந்நிலையில்,கர்நாடக முதல்வர் எடியூரப்பா தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”கர்நாடகாவில் எனது தலைமையிலான அரசு பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் முடிவடைகிறது.இந்நிலையில், முதல்வர் பதவியில் இருந்து விலக நான் முடிவு செய்துள்ளேன்.மேலும்,இன்று மதியம் ஆளுநரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளேன். மேலும்,அடுத்த தேர்தலில் பாஜக கட்சி ஆட்சியை பிடிக்க கட்சிக்காக விசுவாசத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன்.எனவே, அனைவரும் எனக்கு ஒத்துழைப்ப அளிக்க வேண்டும்”,என்று தெரிவித்தார்.

Recent Posts

ஏவல் ,பில்லி, சூனியத்திலிருந்து காக்கும் பிரத்தியங்கிரா தேவி ஆலயம் .!

பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…

1 hour ago

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…

1 hour ago

தோனியின் ஸ்வாரஸ்யமான விஷயத்தை உடைத்த ருதுராஜ் ..!! யூடூபர் மதன் கௌரியிடம் கூறியது இதுதான் !!

Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…

2 hours ago

பீகாரில் பயங்கர தீ விபத்து… 6 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…

2 hours ago

உங்களுக்கு இதே வேலையாக போச்சி… பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே.!

Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…

3 hours ago

நள்ளிரவில் அமோக வரவேற்பு ! குகேஷுக்கு மேலும் குவியும் பாராட்டுகள் !

Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…

3 hours ago