கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து…!!!

கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து…!!!

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

படகு போக்குவரத்து ரத்து :

குமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லக் கூடிய படகு போக்குவரத்து, கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்றால் கடந்த 3 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை 8 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கியது.

நேரம் செல்ல செல்ல கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால், படகு சேவை மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனால் படகு பயணம் செய்வதற்காக டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *