கன்னட மொழி மோசமான மொழி – மன்னிப்புக் கேட்ட கூகிள் நிறுவனம்!

இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என கூகுள் தேடுதல் தளத்தில் காண்பித்ததால் கர்நாடக மாநிலத்தில் கண்டனம் எழுந்ததையடுத்து தற்போது கூகுள் நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மோசமான மொழி எது என கேட்டதற்கு கன்னடம் என்று கூகுள் தேடுதல் தளத்தில் கட்டப்பட்டதால், கர்நாடக மாநிலத்தினை சேர்ந்தவர்களும், கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், பாஜக பெங்களூர் எம்.பி. முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி அவர்களும்  தெரிவித்திருந்தனர்.

கர்நாடகத்தை சேர்ந்த பலரும் கூகுள் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக பண்பாடு மற்றும் வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பா அவர்கள், கூகுள் நிறுவனம் 2500 வருடங்கள் பழமை வாய்ந்த கன்னட மொழியை இழிவுபடுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திற்கும் அதை சேர்ந்தவர்களுக்கும் பெருமையை ஏற்படுத்தக் கூடிய விஷயமாக உள்ள கன்னட மொழியை சிறுமை படுத்திய கூகுள் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை அடுத்து தற்போது கூகுள் நிறுவன அதிகாரி ஒருவர் பேசுகையில், இது போன்று கூகுள் தேடுதல் தளத்தில் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் நடந்து விடுவதாகவும், கன்னட மொழி மோசமான மொழி என்பது கூகுளின் கருத்து இல்லை. இந்த சம்பவத்திற்காக கூகுள் நிறுவனம் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது எனவும், இப்பிரச்சனையை உடனடியாக சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Rebekal

Recent Posts

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

5 seconds ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

45 mins ago

6,244 பணியிடங்கள்… ஜூன் 9இல் குரூப் 4 தேர்வு.! TNPSCயின் முக்கிய தேர்வு தேதிகள் இதோ….

TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…

57 mins ago

கிரிக்கெட் உலகில் என்றும் மாஸ்டர்! சச்சினுக்கு குவிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Sachin Tendulkar : இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய…

1 hour ago

ஞாபக சக்தியை அதிகரிக்கும் 7 உணவுகள் எது தெரியுமா ?

Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம். வால் நட்ஸ்; இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது…

2 hours ago

22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்படும்.! இது ராகுலின் கியாரண்டி.!

Rahul Gandhi : மோடிக்கு நெருக்கமான 22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வசூல் செய்யப்படும் என ராகுல் காந்தி…

2 hours ago