கந்த சஷ்டி சர்ச்சை வீடியோ வெளியிட்ட கறுப்பர்கூட்டம்! செந்தில்வாசன் என்பவர் கைது!

கந்த சஷ்டி சர்ச்சை வீடியோ தொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது.

கறுப்பர் கூட்டம் என்கின்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஒரு குழுவினர், தொடர்ந்து இந்து மத நம்பிக்கையை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், இவர்கள் கந்த சஷ்டி கவசத்திற்கு விளக்கம் கூறுவதாக கூறி வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜக உள்பட பல்வேறு தரப்பு, இது தொடர்பாக  காவல் நிலையத்தில் புகார் அளித்தன. புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த சர்ச்சை வீடியோ தொடர்பாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில்வாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.