இறுதி சுற்று வரை வந்த போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பரிசு!

இறுதி சுற்று வரை வந்த போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த பரிசு!

இறுதி சுற்று வரை வந்த 5 போட்டியாளர்களுக்கும் கமல் அவர்களின் ஆசைகேகேற்றபடி பரிசுகள் கொடுத்து மகிழ்வித்து உள்ளார்.

வெற்றிகரமாக கடந்த 100 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் போர் நிகழ்ச்சி நிறைவடைந்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றது யார் என்பது குறித்து நேற்று இரவே தெரிந்து விட்டது. இந்நிலையில், இறுதி சுற்று வரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த ஆரி, சோம், ரம்யா, பாலாஜி, ரியோ ஆகிய ஐந்து பேருக்கும் கமலஹாசன் அவர்கள் தனது சார்பில் பரிசுகளை கொடுத்துள்ளார். அதில் ரியோ வெளியில் சென்றதும் காட்டில் சென்று ஒரு நாள் இருக்க வேண்டும் என்று கூறியதற்காக திசைகாட்டும் கருவி ஒன்று காட்டில் தங்குவதற்கான பேக் கிட்டையும் கொடுத்துள்ளார்.

ஆரிக்கு எழுதுவதற்காக ஸ்பேஸலான பேனாவையும், மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்கள் அடங்கிய டைரியையும் கொடுத்துள்ளார். ரம்யா மரங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் அவருக்கு ஒரு சிறு செடியும்ஆர்கானிக் விதைகள் அடங்கிய மூன்று பைகளும் கொடுத்துள்ளார். சோமுக்கு கோஜன் டரம்பும் பாலாஜிக்கு அவரது விருப்பப்படி டம்புல்ஸ் இரண்டும் கொடுத்துள்ளார். போட்டியாளர்கள் அனைவருக்குமே கமலஹாசன் அவர்களுக்கு கொடுத்த பரிசு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube