கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்று முதல் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஷங்கரின் இயக்கத்தில் கமல் தற்போது நடித்து வருகின்ற திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பூந்தமல்லியில் நடைப்பெற்று வந்தது. அப்போது இப்படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் பல பேர் காயமடைந்தனர் . இச்சம்பவம் சினிமா துறையில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார். மேலும் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, பாபி சிம்கா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.இந்த படத்தில் 30ஆயிரம் பேரை வைத்து சண்டை காட்சிகளை எடுப்பதற்கான வேலைகளில் ஈடுபடும் போது தான் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு வயதான சுதந்திர போராட்ட வீரர் அரசியல்வாதிகளில் ஊழல் செய்பவர்களை களை எடுத்து, இறுதியாக போலீசாரிடம் சரணடைவது போன்று தான் கதையாம். இந்த படம் இடைவேளைக்குப் பிறகு தான் செம மாஸ்ஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது தற்போது படத்தின் கதை கசிந்துள்ளதால் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சென்னையில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு பணிகளை விரைவில் முடிப்பதோடு, மீதமுள்ள காட்சிகளையும் விரைவில் படமெடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Air Force Plane Crash: ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…
Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…