கமல் நடிப்பில் வெளியான ‘ராஜ்திலக்’ என்ற படத்தினை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளரான அனில்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது. அதில் சினிமா பிரபலங்களும் அடங்கும். இந்த நிலையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான அனில்சூரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் கமல் நடித்த ‘ராஜ்திலக்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை கடந்த 2ஆம் தேதி கொரோனா அறிகுறி காரணமாக மும்பையில் உள்ள 2 மருத்துவமனையில் அனுமதிக்க முயற்றித்ததாகவும், ஆனால் மருத்துவமனையில் இடமில்லை என்ற காரணத்தால் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதனையடுத்து வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று இவரது இறுதி சடங்கில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு 4 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் அனில்சூரியின் சகோதரரான ராஜீவ் சூரி தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி பாலிவுட் திரையுலகினை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர்.…
பிரத்தியங்கிரா தேவி- பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் சிறப்புகள் மற்றும் அமைந்துள்ள இடம் பெற்று இப்பதிவில் அறியலாம். பிரத்தியங்கிரா தேவி ஆலயம் அமைந்துள்ள இடம்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்…
Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை…
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் 'தல' தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார். தமிழக யூடூபரான…
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…