டோக்கியோ ஒலிம்பிக்:வட்டு எறிதலில் கமல்ப்ரீத் மிரட்டல்….!

டோக்கியோ ஒலிம்பிக் 64 மீ தூரம் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் வெற்றி பெற்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் கடந்த வாரம்,வீராங்கனை மீராபாய் சானு முதல் வெள்ளி பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்த நிலையில்,நேற்று குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.அதேபோல், பேட்மிண்டனில் பி.வி.சிந்து, அரையிறுதிக்கு முன்னேறி அவரும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

இரு பிரிவுகள்:

இந்நிலையில்,இன்று பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டிகள் நடைபெற்றன. இதில்,குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ என இரு பிரிவுகளாக வீராங்கனைகள் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குரூப்பில் தலா 15 வீராங்கனைகள் என மொத்தம் 30 பேர் இடம் பெற்றிருந்தனர்.அதன்படி, குரூப் ‘ஏ’ பிரிவில் இந்திய வீராங்கனை சீமா புனியாவும், குரூப் ‘பி’ யில், இந்தியா சார்பில் கமல்ப்ரீத் கவுர் ஆகியோரும் இடம்பெற்றனர்.

ஆறாவது இடம்:

அதன்படி,முதலில் நடைபெற்ற குரூப் ‘ஏ’ பிரிவு போட்டியில், ஒவ்வொரு வீராங்கனையும் தலா 3 முறை வட்டு ஏறிய வேண்டும் என்பது நிபந்தனை.இதில்,இந்திய வீராங்கனை சீமா புனியா 3 சுற்றிலும் சேர்த்து சராசரியாக 60.57 மீட்டர் தூரம் வீசி ஆறாவது இடம் பிடித்தார்.ஆனால்,இப் பிரிவில் முதல் வீராங்கனையாக 63.75 மீட்டர் தூரம் வீசி குரோஷியாவின் பெர்கோவிக் முதலிடம் பிடித்தார்.

மற்றொரு பிரிவு:

இதனைத் தொடர்ந்து,நடைபெற்ற ‘பி’ பிரிவுக்கான போட்டியில், இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் மிரட்டலாக விளையாடினார்.காரணம்,வட்டு எறிதலில் சராசரியாக 64 மீட்டர் தூரம் வீசி, ‘பி’ பிரிவின் பட்டியலில் இரண்டாவது வீராங்கனையாக இடம் பிடித்துள்ளார்.இப்பிரிவில் அமெரிக்காவின் அல்மன் 66.42 தூரம் வீசி முதலிடம் பிடித்துள்ளார்.

இதனால்,கமல்ப்ரீத் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கத்தை உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஆளில்லா விமானம் நொறுங்கி விபத்து.!

Air Force Plane Crash:  ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…

2 mins ago

வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க…ஓகே சொல்லிய விஜய்?

Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…

34 mins ago

நேற்று RBI தடை…. இன்று பங்குகள் சரிவு… கோடாக் மஹிந்திரா வங்கியின் தற்போதைய நிலவரம்… 

Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…

1 hour ago

தொடர்ந்து சிறிதளவு சரியும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று  குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

2 hours ago

அந்த பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை – நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…

2 hours ago

காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…

2 hours ago