திமுக விரித்த வலையில் சிக்காமல் கமல் தப்பிவிட்டார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திமுக விரித்த வலையில் சிக்காமல் கமல் தப்பிவிட்டார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

  • திமுக பேரணியில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் மறுப்பு தெரிவித்து விட்டது.
  • திமுக விரித்த வலையில் சிக்காமல் கமல் தப்பிவிட்டார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த சட்டம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இன்று பேரணி நடைபெறுகிறது.இந்த பேரணியில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் பங்கேற்க கமல் விருப்பம் தெரிவித்தார்.இதனால் அவருக்கு திமுக  சார்பாக நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.இதன் பின்பு திமுக பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும், மக்களின் அமைதியை சீர்குலைக்கவே, திமுக பேரணி நடத்துகிறது .மேலும் திமுக விரித்த வலையில் சிக்காமல் கமல் தப்பிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube