கமல்ஹாசன் ஆலந்தூரில் போட்டி..? மார்ச் 3-ம் தேதி பிரச்சாரம்..!

கமல்ஹாசன் மார்ச் 3-ம் தேதி ஆலந்தூரில் பிரச்சாரத்தை துவங்குகிறார் என பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை மற்றும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகும் என  மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்தார். மேலும், கமல்ஹாசன் மார்ச் 3-ம் தேதி ஆலந்தூரில் பிரச்சாரத்தை துவங்குகிறார். ஆலந்தூர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய வேட்பாளர் தொகுதி என்பதால் அங்கு பிரச்சாரத்தை துவங்குகிறார் கமல்ஹாசன் என தெரிவித்தார்.

இதனால், கமல்ஹாசன் ஆலந்தூரில் போட்டியிட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
murugan