கமல்ஹாசனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் -ஹெச்.ராஜா

கமல்ஹாசனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது பாஜக தேசியசெயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,இந்துக்கள் பற்றி அவதூறாக பேசிய கமல்ஹாசனை, குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment