அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு செல்லும் பாதைக்கு கல்யாண் சிங் பெயர் வைப்பு – உ.பி.துணை முதல்வர் மௌரியா

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு செல்லும் பாதைக்கு கல்யாண் சிங் பெயர் வைப்பு.

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் அவர்கள், கடந்த ஜூலை மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரக கோளாறு, இதய கோளாறு, நரம்பியல் பிரச்சினை காணப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது  இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு செல்லும் சாலைக்கு கல்யாண் சிங் என பெயரிடப்படுவதாக உத்திரபிரதேச  மௌரியா  தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.