இன்று முதல் ஓளிபரப்பாகிறது பள்ளி மாணவர்களுக்கான கல்வி சேனல்

இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொலைக்காட்சி ஒளி பரப்பாக உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையில்  மாணவர்களுக்கான தனி சேனலின் ஒளிபரப்பு ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் தொடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சேனலுக்கு கல்வி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.சென்னையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.ஏற்கனவே கல்வி சேனலுக்கு ஒரு கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து சேனல் தொடங்குவதற்கான விழாவிற்கான அழைப்பிதழை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரில் வழங்கினார்.இதனைத்தொடர்ந்து  இன்று நடைபெறும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி சேனலை தொடக்கி வைக்கிறார்.