பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை! – தொடர் மழை காரணமாக கலெக்டர் உத்தரவு!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் தற்போது அனேக இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. ஏற்கனவே திருவாரூர் மாவட்டம், தேனி மாவட்டம், கடலூர் மாவட்டம், நாகை மாவட்டம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
8 மணிக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியானதால் கிராமப்புறங்களிலிருந்து வரும் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு வந்த பிறகு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.