சூப்பர் ஸ்டார் மற்றும் சூர்யாவின் பிரம்மாண்ட திரைப்படங்களை கைப்பற்றிய முன்னணி பட நிறுவனம்!

சூப்பர் ஸ்டார் மற்றும் சூர்யாவின் பிரம்மாண்ட திரைப்படங்களை கைப்பற்றிய முன்னணி பட நிறுவனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது A.R.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இதேபோல, லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் காப்பான். இந்த திரைப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா நாயகனாக நடித்துள்ளார். மோகன்லால், ஆர்யா,-சாயிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த இரு படங்களின் தெலுங்கு உரிமத்தை  N.V.பிரசாத் என்பவர் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. காப்பான் திரைப்படம் பந்தோபஸ்து பெயரில் தெலுங்கில் வெளியாக உள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube