“காலா” பட நடிகரும்,”நாட்டாமை” பட கதாசிரியருமான ஈரோடு சௌந்தர் காலமானார்.!

“காலா” பட நடிகரும்,”நாட்டாமை” ,சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களின் கதாசிரியருமான ஈரோடு சௌந்தர் காலமாகியுள்ளார்.

இயக்குநரும் ,நடிகரும் ,பிரபல வசன கர்த்தாவுமான ஈரோடு சௌந்தர் உடல்நல குறைவு காரணமாக நேற்றைய தினம் காலமானார்.கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான சேரன் பாண்டியன்,நாட்டாமை ,பரம்பரை , சமுத்திரம் உள்ளிட்ட படங்களுக்கு கதை,வசனம் எழுதியவர் தான் ஈரோடு சௌந்தர்.அதனை தொடர்ந்து 1992-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த முதல் சீதனம் ,சிம்மராசி உள்ளிட்ட படங்களை இயக்கியும் வெற்றி பெற்றார் . கடைசியாக இவரது இயக்கத்தில் அய்யா உள்ளேன் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் அவரது பேரனான கமலேஷ் நடித்திருந்தார்.

முழுக்க முழுக்க குடும்ப பாங்கான படங்களை இயக்கிய இவர் கமல்ஹாசனின் தசாவதாரம்,ரஜினியின் காலா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் 63 வயதான இவர் நேற்றைய தினம் சிறுநீரக பாதிப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.இவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.