#JustNow: ஆசிரியர்களுக்கு இனி செயலி மூலம் வருகைப்பதிவு.. இன்று முதல் அமல்!

பள்ளிகளில் இன்று முதல் ஆசிரியர்கள், மாணவர்கள் கல்வித்துறை செயலி மூலம் வருகைப்பதிவு.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்களது வருகைப் பதிவை பள்ளிக்கல்வித்துறையின் TNSED செயலி மூலம் பதிவு செய்யும் முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் இனி செயலி வழியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் தினசரி வருகைப் பதிவை TNSED App-ல் மட்டுமே பதிவிடும் முறை அமலானது. வருகைப் பதிவேடுகளில் இனி பதிவிடக் கூடாது என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும், ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த செயலி பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

author avatar
Castro Murugan

Leave a Comment