#Justnow:தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் – ஜூலை 6 கடைசி நாள் – பள்ளிகல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நியமணம் செய்ய கடந்த வாரம் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.அதன்படி,அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்,5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.10,000 தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.12,000 தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால்,இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.இதனையடுத்து,அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

  • அதன்படி,இடைநிலை ஆசிரியர் பதவிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுதாள் 1-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தாள் இரண்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கடந்த ஜூன் 1,2022 வரை காலியாகவுள்ள பணியிடங்களை மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
  • இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி வந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
  • முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டிஆர்பி சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களையும் ஆசிரியர்களாக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும்,பள்ளிக்கு அருகே, மாவட்டத்திற்குள் வசிப்போருக்கு முன்னுரிமை தந்து ஆசிரியர்களாக நியமிக்கலாம்,திறமை அடிப்படையில் மட்டுமே தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணியில் திருப்தி அளிக்கவில்லை என்றால்,உடனே பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.
  • தேர்வான விண்ணப்பதாரர்களை வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களது திறனை பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்நியமனமானது முற்றிலும் தற்காலிகமானது.

இந்நிலையில்,தமிழகத்தில் காலியாகவுள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நாளை  (ஜூலை 4) முதல் ஜூலை 6-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும்,தங்களது விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும்,இந்த விண்ணப்பங்களை தற்காலிக நியமனம் கோரும் பள்ளித் தலைமையாசிரியருக்கு மாவட்டக் கல்வி அலுவலர் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


 

Leave a Comment