மீண்டும் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 4 இந்திய வம்சாவழியினர்கள்.!

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான Dr.அமி பெரா, பிரமீலா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் மீண்டும் தேர்வாகியுள்ளனர்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலை முன்னிட்டு ஜனநாயக கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான Dr.அமி பெரா, பிரமீலா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் மீண்டும் தேர்வாகியுள்ளனர். ராஜா கிருஷ்ணமூர்த்தி லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை தோற்கடித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் கலிபோர்னியாவில் இருந்து காங்கிரஸ்காரரான அமி பெரா தொடர்ந்து 5-வது முறையாகவும், ரோ கண்ணா மூன்றாவது முறையாகவும் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளனர். அதே போன்று, வாஷிங்டன் மாநிலத்தில் இருந்து பிரமீலா ஜெயபால் தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.