குப்பை தொட்டியில் குழந்தை! அர்பணிப்புணர்வுடன் பணி செய்யும் தூய்மை பணியாளர்!

குப்பை தொட்டியில் குழந்தையை வைத்துவிட்டு, தூய்மை பணியில் ஈடுபாட்ட தாய்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சுஜா என்பவர், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்.  இவருக்கு 3 வயதில், பொட்டு என்ற குழந்தை உள்ளது. அவரை தனியாக விட்டுச் செல்ல இடம் இல்லாத காரணத்தினால் குழந்தையை தன்னுடனேயே அழைத்துச் செல்கிறார்.

இதனையடுத்து, இவர் அந்த குழந்தையை குப்பை தள்ளுவண்டி வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள, ஒரு குப்பை கூடையில் அமர வைத்துவிட்டு, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி சுஜா தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த சம்பவம் பார்ப்போரின் மனதை நெகிழ வைத்தது. இதனையடுத்து, கொரோனா பரவல் காலத்திலும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாநகராட்சி வழங்க வேண்டுமென்றும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய உதவியை அரசு செய்துகொடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.