தமிழகம் வந்தடைந்தார் ஜேபி நட்டா ! பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

நேற்று இரவு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா  தமிழகம் வந்தடைந்தார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலைகளை செய்து வருகின்றது. தமிழகத்தில் அதிமுக, திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறன.

இதனிடையே நேற்று  இரவு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர் .  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று மதுரையில் நடைபெறும்  பாஜக சமூக ஊடக பிரிவு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும், மாலை 5.30 மணிக்கு நடைபெறும் பொது கூட்டத்திலும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.