செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் .!

  • டெல்லியில் நேற்று மாலை குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.
  • இதுவரை இந்த சம்பவத்தால் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.வன்முறை குறித்த செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

வடகிழக்கு டெல்லியில் வன்முறை குறித்த ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர் இடையில் செய்திகளை சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
காயமடைந்த இரண்டு செய்தியாளர்களும் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.கடந்த சில மாதங்களாக டெல்லியில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் 2 முறை துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று மாலை குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி கொண்டனர். மேலும் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் முதலில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்.பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

இந்த சம்பவத்தால் 10 பேர் உயிரிழந்தனர்.அதில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதையெடுத்து இந்த வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று மதியம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் , முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வல் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

author avatar
Dinasuvadu desk