தனியார் நர்ஸிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் அடுத்துள்ள முத்தனம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நர்ஸிங் கல்லூரியின் தாளாளா் ஜோதிமுருகன் மீது மாணவிகள் பாலியல் புகாா் அளித்தனர். புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தாளாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை மறியல் ஈடுபட்டனா். போலீசார் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஜோதிமுருகனை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர். 2 நாள்கள் மாணவா்கள் நடத்திய போராட்டத்துக்குப் பின் அந்த கல்லூரிக்கு மாவட்ட நிா்வாகம் சீல் வைத்தது. விடுதியில் தங்கியிருந்த மாணவா்களும் சொந்த ஊா்களுக்கு சென்றனா்.
இதனைத் தொடர்ந்து தலைமறைவான ஜோதிமுருகனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஜோதிமுருகன், திருவண்ணாமலை அருகே போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், பாலியல் வழக்கில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவலை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் வழங்கியது.
இந்நிலையில், தனியார் நர்ஸிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க ஜோதிமுருகனின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், ஜோதிமுருகன் நாள்தோறும் வட மதுரை காவல்நிலையத்தில் கையெழுத்திடவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…