சென்னை அணிக்கு பின்னடைவு.., ஜோஷ் ஹேசில்வுட் விலகல்..!

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஜேஷ் ஹேசில்வுட் அறிவித்துள்ளார்.

இன்னும் சிலநாட்களில் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜேஷ் ஹேசில்வுட் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக பல மாதங்களாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளதால் அடுத்த 2 மாதங்கள் குடும்பத்துடன் சற்று ஓய்வெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், டி 20 உலகக்கோப்பை, ஆஷிஸ் தொடரை கருத்தில் கொண்டு விலகுவதாக  தெரிவித்தார்.

ஹேசில்வுட் விலகல் சென்னை அணிக்கு பின்னடைவு என கூறப்படுகிறது. இதுவரை ஐபிஎல் தொடரிலிருந்து 3 ஆஸ்திரேலிய வீரர்கள் விலகியுள்ளனர். ஜோஷ் ஹேசில்வுட், பிலிப், மிட்செல் மார்ஷ் ஆகியோர் விலகியுள்ளனர்.

author avatar
murugan