இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதம் விளாசியுள்ளார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லே களமிறங்கினர். இருவரின் பார்ட்னர்ஷிப் மூலம் 50 ரன்களை எடுத்து 63 ரன்கள் சேர்த்து இருந்தபோது அஷ்வின் வீசிய பந்தை ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து ரோரி பர்ன்ஸ் விக்கெட்டை இழந்தார்.
பின்னர், லாரண்ஸ் களமிறங்க வந்த வேகத்தில் 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் வெளியேறினார். இதனையடுத்து, களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட், டொமினிக் சிப்லே உடன் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
ஒருபுறம் அதிரடியான ஆட்டத்தை விளையாடி வரும் கேப்டன் ஜோ ரூட் 164 பந்தில் சதம் விளாசினார். அதில், 12 பவுண்டரி அடங்கும். மறுபுறம் ஜோ ரூட்டிற்கு தூணாக நிதானமாக விளையாடி வரும் டொமினிக் சிப்லே 250 பந்தில் 83* ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். டொமினிக் சிப்லே 12 பவுண்டரி அடித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழந்து 227 ரன்கள் எடுத்துள்ளது. டொமினிக் சிப்லே 83* ரன்களும், ஜோ ரூட் 100* ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.
Yuzvendra Chahal : ஐபிஎல் தொடரில் ஒரு பவுலராக யாரும் செய்யாத புதிய சாதனையை எட்டியுள்ளார் யுஸ்வேந்திர சாஹல். கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த…
Vijayakanth : விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நஷ்டத்தால் மூழ்கிய போது அவருக்கும், விஜய்க்கும் விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் பல தயாரிப்பாளர்களுக்கு, பல இயக்குனர்களுக்கு…
PM Modi : உண்மையை சொன்னதால், I.N.D.I.A கூட்டணி பயத்தில் மூழ்கியுள்ளது என பிரதமர் மோடி ராஜஸ்தான் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25…
Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என…
Weather Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும். தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம்…
Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு,…