கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் முன் களப் பணியாளர்கள் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா காரணமாக 100 தற்காலிக செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கோயம்புத்தூர் மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு கொரோனா தடுப்பு பணிக்கென 100 தற்காலிக செவிலியர்கள் மூன்று மாத காலத்திற்கு நேர்காணல் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.12,000/- தொகுப்பூதியம் வழங்கப்படும். தகுதியுடைய நபர்கள் (செவிலியருக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி B.Sc Nursing/Diploma Nursing தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்) 03.06.2021 காலை 10.00 மணிக்கு கீழ்காணும் அனைத்து அசல் மற்றும் ஒரு நகல் ஆவணங்களுடன் டவுன்ஹால் அருகில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கோரப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்கள்.
1.கல்விச் சான்றிதழ்கள்
2.இருப்பிட சான்று
3.சாதிச் சான்று
4.ஆதார் அட்டை
Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி…
Ghilli : கில்லி படத்தில் முதலில் தங்கை கதாபாத்திரம் கிடையாது தம்பி கதாபாத்திரம் தான் இருந்தது என சதீஷ் ஸ்டீபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் தரணி…
supreme court: ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும்…
Congress Manifesto : காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி…
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…