நாடாளுமன்றத்திலும் ஜெயலலிதாவின் படத்தை திறக்கலாம்!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சமூகநீதிக்காக போராடிய ஜெயலிலதாவின் படத்தை நாடாளுமன்றத்திலும் திறக்கலாம் என  தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம் பசுமைப்பூங்காவில் உணவகங்களை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக் கூடாது என மாற்றுக்கட்சியினர் கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். சமூகநீதிக்காக போராடிய ஜெயலிலதாவின் படத்தை நாடாளுமன்றத்திலும் திறக்கலாம் என்றும் அவர் கூறினார்.

சென்னை பெருநகரம் முழுவதும் குற்றங்களை தடுக்கும் வகையில் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment