உ.பி மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய வாலிபரின் காலையே தலையணையாக பயன்படுத்திய கொடூரம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் விபத்தில் சிக்கி இடது காலில் பலத்த காயம் ஏற்பட்ட இளைஞன் பந்தல்காண்ட் என்ற பகுதியில் உள்ள பல் நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தனியார் பள்ளி வாகனத்தின் ஓட்டுநராக இவர் பணிபுரிகிறார். இந்நிலையில் இவர் பள்ளி குழந்தைகளுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த டிராக்டருடன் மோதி விபத்து ஏற்படாமல் இருப்பதை தடுக்க முயற்சித்த போது தலைகீழாக வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அவரது காலில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது.

அந்த இளைஞனின் காலையே, அவருக்கு தலையணையாக மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் பயன்படுத்த வைத்ததாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment