40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நகைகள் தேய்மானம் காரணமாக எடை குறைவு ஏற்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் விளக்கம்.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 2-ம் பிரகாரத்திலுள்ள, கருவூலத்தில் விலைமதிப்புமிக்க தங்கம், வெள்ளி, வைடூரியம், பவளம் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த ஆபரணங்களை திருவிழா நாட்களில் பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நகை மதிப்பீட்டாளர்கள், ஆய்வு மேற்கொண்டதில், நகைகளின் எடை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஓய்வுபெற்ற, தற்போதைய குருக்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 30 பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கோவில் இணை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நகையில் தேய்மானம் ஏற்பட்டு, நகையின் எடை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களின் அனைத்து இனங்களும் சரியாக உள்ளன என்றும், இந்த விவகாரத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், கோவில் நகைகளின் பாதுகாப்பு குறித்து, பக்தர்களோ, பொதுமக்களோ அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தங்கம், வெள்ளி பொருட்களில் தேய்மானம் காரணமாக ரூ.14,43,254 இழப்பு என நகை மதிப்பீட்டாளர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2024: டெல்லி அணி 8.5 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் அணியும், டெல்லி அணியும் மோதுகிறது நடப்பாண்டில் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக இன்று இரவு 7.30…
Mankatha Re-release : மங்காத்தா திரைப்படம் மே 1-ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது ரீ-ரிலீஸ் படங்கள் செய்யவது ஒரு ட்ரெண்ட் ஆக…
LokSabha Election 2024: முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை…
Rahul Gandhi : பிரதமர் மோடி 25 பேருக்காக தான் ஆட்சியை நடத்துகிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக…
Wrinkles-இளம் வயதிலேயே ஏற்படும் முதுமை தோற்றத்திற்கான காரணமும், அதற்கான தீர்வையும் இப்பதிவில் காண்போம். நாம் ஒருவரின் வயதை கணக்கிட வேண்டுமானால் அவரின் சருமத்தின் தோலை வைத்து தான்…