ஹைதராபாத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நகைக்கடை வியாபாரி!

ஹைதராபாத்தில் கொரோனா வைரஸால் உயிரிழந்த நகைக்கடை வியாபாரி.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை இந்தியாவில், இந்த வைரஸ் பாதிப்பால், 697,836 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 19,700 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தில், சனிக்கிழமையன்று பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 100 பேர் கலந்து கொண்ட பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட நிலையில், இவர் கொரானா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

நகைக்கடை வியாபாரி உயிரிழந்ததை தொடர்நது, இந்த விழாவில் கலந்து கொண்ட மற்ற உறுப்பினர்கள், கொரோனா பரிசோதனை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.