4 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்தது மத்திய அரசு

மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட 4 பேர் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மத்திய அரசானது,மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உபா சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் மூலம் நாட்டிற்கு எதிராக செயல்படும் தனி நபர் மீதும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க முடியும் விசாரணை நடைபெறும் போது குற்றம் சாட்டப்பட்டவரின் சொத்துக்களை முடக்க முடியும் என சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் ‘உபா’ சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.மவுலானா மசூத் அசார், ஹபீஸ் சயித், சாகி ரஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகிய 4 பேரை  பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.