JEECUP 2023 தேர்வுக்கான பதிவு தேதி நீட்டிப்பு.!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் JEECUP 2023 பதிவு தேதியை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

உத்தரபிரதேச கூட்டு நுழைவுத் தேர்வுக்கு பதிவு செய்வதற்கான கடைசி தேதி மே 15, 2023 வரை நீட்டித்துள்ளதாக அம்மாநில கூட்டு நுழைவுத் தேர்வு கவுன்சில் அறிவித்துள்ளது.

முன்னதாக விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 5ம் தேதி இருந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், JEECUP-ன் அதிகாரப்பூர்வ தளமான jeecup.admissions.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தொடர்புடைய விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் JEECUP-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.