ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யா, ஞானவேல் ஆகியோருக்கு எதிரான வழக்கு ரத்து!

ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் OTT-யில் வெளியுண்ண  திரைப்படம் “ஜெய்பீம்”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இந்த திரைப்படத்திற்கு பல விருதுகளும் கிடைத்துள்ளது. இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில்  குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தும் வகையில், காட்சிகள் இடம்பெற்றதாக கூறி, நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment