சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல்.!

சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல்.!

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து வந்தனர். இதையடுத்து,  உயிரிழந்த வியாபாரிகள் உடற்கூராய்வு நேற்று இரவு நெல்லை அரசு மருத்துவமனையில் நடுவர் பாரதிதாசன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிலையில், உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை வாங்க உறவினர்கள் ஒப்புதல்  அளித்துள்ளனர். நீதித்துறை மீது மேல் நம்பிக்கை வைத்து உடலை வாங்குவதாக உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்சி தெரிவித்துள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube