பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்த ஜெயம் ரவி.!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெறும் ஜெயம்ரவி காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் நிறைவடைந்தது

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.

இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படம் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி இரண்டு பாகங்களுக்கான படப்பிடிப்பையும் தான்  முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்வீட்டர் பக்கத்தில் “பொன்னியின் செல்வன் இரண்டு பாகத்திற்கான எனது படபிடிப்பை முடித்துவிட்டேன். மணிரத்தினம் சார் என் மீது நம்பிக்கை வைத்ததையும், தனி அக்கறையோடு பார்த்துக் கொண்டதையும், மீண்டும் உங்களுடன் பணிபுரியும் வரை நான் உங்களை மிஸ் செய்வேன். இதெல்லாம் என் தாயின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.