ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : ஆறுமுகசாமி ஆணையத்திற்க்கு 7வது முறையாக கால நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு 7வது முறையாக காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்திற்கு 7வது முறையாக காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது .இன்றுடன் ( பிப்ரவரி   24ம் தேதி) முடிவடைந்த நிலையில் மேலும் 4 மாதம் காலநீட்டிப்பு  செய்யப்பட்டுள்ளது.