ஜப்.,கப்பல்கள் வருகை மகிழ்ச்சி !எதிர்போம்! சீனாவை-சூலுரை

லடாக்  எல்லைப்பகுதியில் அத்துமீறி நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்போம் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியாவுக்கான ஜப்பான் துாதர், சடோஷி சுசூகி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியுள்ளதாவது: லடாக்கில், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், நிலைமையை மாற்றும் சீனாவின் முயற்சியை, ஜப்பான் கடுமையாக எதிர்க்கும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஜப்பான் முழுமையாக ஆதரவு அளிக்கும்.லடாக் எல்லைப் பிரச்னை பற்றி, இந்திய வெளியுறவு செயலர், ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையானது  திருப்திகரமாக இருந்தது.எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் இந்திய முயற்சிகளை, சீனா ஏற்க வேண்டும்.மேலும் இந்திய மற்றும் ஜப்பானிய கடலோர காவல் படையைச் சேர்ந்த ரோந்து கப்பல்கள் கடந்த, 27ம் தேதி, இந்திய பெருங்கடலில், இணைந்து பயிற்சியில் ஈடுபட்ட நிகழ்வானது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

author avatar
kavitha