ஜெயில் சாப்பாடை இனி ஸ்விக்கி(Swiggy)யில் சாப்பிடலாம்!!

ஜெயிலில் சிறை கைதிகள் கையால் தயாரிக்கப்படும் பிரியாணியை தங்கள் வீட்டில் சாப்பிட திரிசூர்ல் உள்ள வியியூர் சிறையில் ஸ்விக்கி மூலம் இன்று முதல் அறிமுகமாகிறது.

இதில் பிரியாணி மட்டுமல்லாமல், ஒரு லெக் பீஸ், மூன்று சப்பாத்தி, ஒரு கப் கேக், சாக்லேட், ஊறுகாய், ஒரு லிட்டர் தண்ணிபாட்டில், மற்றும் வாழை இலை. இவை அனைத்தும் 127ரூபாயில் ஸ்விக்கி மூலம் மட்டுமே வாங்க முடியும்.

இந்த பிரியாணியை சிறை அதிகாரிகள் கண்காணிப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தயாரித்து வருகின்றனர்.

உணவு மட்டுமின்றி, ஒருநாள் ஜெயிலில் தங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்த வியியூர் சிறை நிர்வாகம் திட்டமிட்டுவருகின்றனர்.