ரஹானேவிடம் மன்னிப்பு கேட்ட ஜடேஜா.. சிரித்தபடி வெளியேறிய ரஹானே!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்பொழுது இரண்டாம் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அடுத்த களமிறங்கிய இந்திய அணி, 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 91.3 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 277 ரன்கள் எடுத்துள்ளது. அப்பொழுது மழை குறுக்கிட்டதால், 2 ஆம் நாள் ஆட்டம் சீக்கிரமாக முடிந்தது. அதனைதொடர்ந்து, இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் கேப்டன் ரஹானே – ஜடேஜா கூட்டணி சிறப்பாக ஆடிவந்தது. ஜடேஜா ஒரு பந்தை ஷார்ட் கவரில் தட்டினார். மறுபுறத்தில் இருந்த ரஹானேவை சிங்கிள் ஓட அழைத்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக 112 ரன்கள் அடித்து ரஹனே ரன் அவுட் ஆகினார்.

இதனால் ஜடேஜா, ரஹானேவை பார்த்து தலைகுனிந்து நின்றார். அப்பொழுது ரஹானே, ஜடேஜாவிடம் கோபப்படாமல், சிரித்தபடி அவரை ஊக்கப்படுத்தி, விளைடுமாறு கூறினார். ரஹானேவின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானேவின் தவறினால் விராட் கோலி ரன் அவுட் ஆனார். அப்போது கோலி கோபமடைந்து, மைதானத்தை விட்டு வெளியேறினார். ஆனால் ரஹானே ஜடேஜாவிடம் சற்றும் கோபப்படாமல் அவரை ஊக்கப்படுத்தி, விளையாட்டில் கவனம் செலுத்தி விளைடுமாறு கூறியது குறிப்பிடத்தக்கது.