ஜடேஜாக்கு கையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று நடந்த 3 ஆம் போட்டியை இந்திய அணி டிரா செய்ததால், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. இதனைதொடர்ந்து 4 ஆம் டெஸ்ட் போட்டி, இம்மாதம் 15 முதல் 19 ஆம் தேதி வரை பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் ஜடேஜா, பும்ரா, விஹாரி ஆகிய இந்திய வீரர்கள், 4 ஆம் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். அந்தவகையில் ஜடேஜாக்கு 3 ஆம் நாளில் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து, ஜடேஜாவின் இடது கையில் பட்டு, காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து சிட்னியில் உள்ள மருத்துவமனையில் ஜடேஜா சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அறுவை சிகிச்சை முடிந்து விட்டதால் சில நாட்களுக்கு தன்னால் ஆட முடியாது எனவும், விரைவில் களத்திற்கு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…
Sachin Tendulkar : இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய…
Memory power-ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை பற்றி இப்பதிவில் காண்போம். வால் நட்ஸ்; இதில் ஒமேகா-3 ,டி ஹெச் ஏ போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது, இது…
Rahul Gandhi : மோடிக்கு நெருக்கமான 22 பேரிடம் இருந்து 16 லட்சம் கோடி ரூபாய் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வசூல் செய்யப்படும் என ராகுல் காந்தி…
Love Brain Disorder : சீனாவில் 18 வயதான கல்லூரி மாணவிக்கு 'லவ் ப்ரைன்' எனும் வித்தியாசமான நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சீன பத்திரிகையின் அறிக்கை சீனாவில்…