இத்தாலி ஓபன் டென்னிஸ் : 10வது முறையாக ரஃபேல் நடால் சாம்பியன்..!!

இத்தாலி ஓப்பன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடால் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்

இத்தாலியில் உள்ள ரோம் நகரில் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர்  ஜோகோவிச் மற்றும்  மூன்றாம் நிலை வீரரான ரஃபேல்நடாலும் மோதினர்.

இந்த இறுதி போட்டியில் 3 செட் நடைபெற்றது. இதில் முதல் செட்டை ரஃபேல் நடால் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்ததாக இரண்டாவது செட்டை 6-1 என கைப்பற்றினர். அடுத்ததாக கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி ரஃபேல் நடால் 6-3 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம் 10வது முறையாக ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.