உதயநிதியின் அரசியல் பயணம் குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

உதயநிதியின் அரசியல் பயணத்தை அவரது செயல்பாடுகளை பொறுத்து மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உதயநிதிக்கு வாய்ப்பளிக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த அவர், தன்னை போன்று, தனது மகனும் களத்தில் கடுமையாக பணியாற்றுவதாகவும், இருந்தாலும், உதயநிதியின் அரசியல் பயணத்தை அவரது செயல்பாடுகளை பொறுத்து மக்கள் தான் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வரும் தேர்தலில் திருவெல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.