முகத்திலுள்ள பருக்கள் மறைய வேப்பிலையுடன் இதை கலந்தால் போதும் !

ஆண்கள் பெண்கள் இருவரையுமே அழகாக காட்டுவது முகம் தான். இந்த முகத்தில் பருக்கள் வந்து முக அழகை கெடுத்துவிடுகிறது. இதை மறைப்பதற்கு செயற்கையான முறையை பயன்படுத்துவதை விட இயற்கையான முறைகள் அறிந்துகொள்ளலாம் வாருங்கள்.

பருக்கள் மறைய வேப்பிலை

முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி மற்றும் அதே அளவுக்கு சிவப்பு சந்தன பொடியை ஒரு பவுலில் எடுத்து கலந்துகொள்ளவேண்டும். அதனில் நீர் சேர்த்து அதை பேஸ்ட் போல தயாரித்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் வரை ஊற வைக்கவேண்டும். பின் வெதுவெதுப்பான அல்லது சாதாரண நீரால் முகத்தை கழுவி விடவும். இது போல வாரம் இரண்டு மூன்று முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி அழகிய மென்மையான முகம் கிடைக்கும்.

author avatar
Rebekal