‘லேண்டர் கண்டுபிடிக்க பட்டாலும் இதுவரை அதனுடன் தகவல் தொடர்பு இல்லை’ – இஸ்ரோ அதிரடி ட்வீட்!

‘லேண்டர் கண்டுபிடிக்க பட்டாலும் இதுவரை அதனுடன் தகவல் தொடர்பு இல்லை’ – இஸ்ரோ அதிரடி ட்வீட்!

நிலவின் தென்துருவத்தில்  ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இஸ்ரோவின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து, ஆர்பிட்டர் பகுதி நிலவின் வட்டப்பாதையில் செலுத்தப்பட்டது.

இந்த ஆர்பிட்டர் பகுதியில் இருந்து விக்ரம் லேண்டர் பகுதியானது பிரிக்கப்பட்டு நிலவின் தரை பகுதியை நோக்கி அனுப்பப்பட்டது. அப்ப்போது நிலவின் தரையை நெருங்குகையில், நிலவின் தரையில் இருந்து 2.1 கிமீ தொலைவில் இருக்கும் பொது லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கக்ப்பட்டது.

இதனை அடுத்து,நிலவின் வட்டப்பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் நிலவின் மீதான தொடர் ஆராய்ச்சி நடைபெறும், மேலும் தகவல் துண்டிக்கப்பட்ட லேண்டர் இருப்பிடம் மற்றும் அதனுடனான தகவல் தொடர்பு மீட்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

அண்மையில் விக்ரம் லேண்டர் இருப்பிடம் கடுபிடிக்கப்பட்டது. அது சேதாரமில்லமல் முழுமையாக உள்ளது என இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில் இன்று, இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இஸ்ரோ இருப்பிடம் கண்டறியப்பட்டது.  இன்னும் அதனுடன் தகவல் தொடர்பு கிடைக்கவில்லை. அதனால், ஆர்பிட்டர் மூலம் தொடர்ந்து முயற்ச்சி செய்வோம் என இஸ்ரோ அறிவித்து இருந்தது.

ithuvarai enththakavalum illai mutyarchi nadai

orbitar meollam

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube