ரம்யா ஷிவானியுடன் இணைந்து ஆரி தனது ப்ளஸ்ஸை சொல்லும் பொழுது மற்றவர்களை தவறாக சித்தரிக்கிறார் என ஷிவானியிடம் கூறுகிறார்.
பிக் பாஸ் வீட்டில் தற்பொழுது ஆரி, ரம்யா, ரியோ, ஆஜீத், பாலா, ஷிவானி, கேப்ரியல்லா, சோம் ஆகிய எட்டு பேர் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்று நேற்று அனிதா வெளியேறியுள்ளார். ரம்யா கடந்த வரம் பாலா மற்றும் ஆஜீத்துடன் இணைந்து ஆரியை பற்றி தவறாக பேசி ரசிகர்கள் மத்தியில் தனது வாக்குகளை குறைத்துக்கொண்டார். அது போலவே இந்த வாரமும் செய்துள்ளார்.
தற்பொழுது பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கல் ஆரிக்கு தான் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில், ஷிவானியிடம் சென்ற ரம்யா, ஆரிக்கு மக்களிடம் ஆதரவு இருப்பதாக தெரியவில்லை என்பது போல பேசியதுடன், அவர் மற்றவர்களின் தவறை சுட்டி காட்டுவதால் தன்னை நல்லவராக காண்பித்துக்கொள்ள நினைப்பதாகவும் கூறுகிறார். ஷிவானியும் அவருடன் இணைந்து ஆம் அப்படி தான் செய்கிறார் என பேசுகிறார்கள். இதோ அந்த வீடியோ,
View this post on Instagram