இந்த அவமானம் தேவையா? கஸ்தூரியை கழுவி ஊத்தும் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், 17-வது போட்டியாளராக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளே அவர் மற்ற போட்டியாளர்களிடம் கேள்வி கேட்க துவங்கினார். இதனால், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்துள்ளாரா? அல்லது போட்டியாளராக வந்துள்ளாரா என தெரியாமல் இருந்த நிலையில், தற்போது இவர் புதிய போட்டியாளர் தான் என்பது உறுதியாகியுள்ள நிலையில், மற்ற போட்டியாளர்களும் இவரை கலாய்க்க துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று சமையல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சேரன், ஷெரின், மதுமிதா இவர்களை தவிர மற்றவர்கள் அனைவரும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஷெரின் ஆண்கள் அணியிலும், சேரன் பெண்கள் அணியிலும் இருந்தனர். இவர்களுக்கு நடுவராக மதுமிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் சர்க்கரை பொங்கல் செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இரு அணியும் தங்களால் இயன்ற அளவுக்கு சர்க்கரை பொங்கல் செய்தனர். கஸ்தூரி முதல் நாள் வீட்டிற்குள் வரும் போதே தனக்கு நன்றாக சமையல் செய்யத்தெரியும் எனக் கூறியிருந்ததால், கஸ்தூரியின் அணி தான் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு போட்டியாளர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.

ஆனால் போட்டியின் முடிவோ மாறுதலாய் முடிந்துள்ளது. தர்சனின் அணியோ மிகவும் அருமையாக சர்க்கரை பொங்கல் செய்திருந்தனர். கஸ்தூரி அணியோ பொங்களில் கடலைப்பருப்பை  கொட்டி, வேகாத பிரைடு ரைஸ் மாதிரி செய்துள்ளார். மேலும், இவர் பொங்கலில் அரிசியை கழுவாமல் போட்டுள்ளார். இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்கள் அனைவரும்  கலாய்த்து வருகின்றனர்.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.